Manifesto

Home / Manifesto

2021 சட்டசபைத் தேர்தலுக்கான

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை

  • கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.
  • அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்குத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
  • பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்.
  • சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  • கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது.
  • சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி-யில் ஒளிபரப்பு.
  • இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கீடு.
  • தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.
  • தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்.
  • விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  • பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
  • கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
  • மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ. 24,000-ஆக உயர்வு.
  • மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
  • பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.
  • மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்.
  • பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படும்.
  • உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.
  • கூட்டுறவு நகைக் கடன் 5 பவுன் வரை தள்ளுபடி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி.
  • பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு.
  • வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
  • திமுக-வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்
  • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
  • தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு.
  • 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
  • நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டுப் பட்டா.
  • நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
  • சிறு, குறு விசாயிகளின் மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்.
  • கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சைபர் காவல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்.
  • மீனவர்கள், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.
  • பொங்கல்விழா மாபெரும் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்படும்.
  • பெண்கள் இட ஒதுக்கீடு 40%-ஆக அதிகரிக்கப்படும்.
  • ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
  • உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
  • இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்.
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி பணி நியமனம்.
  • சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
  • அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
  • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்.
  • புதிய நீர்வள அமைச்சகம் உருவாக்கப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்.
  • பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
  • அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம்.
விடியலை நோக்கி..!
திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள்.
இணைய